எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க!ஆணாக மாறிய பெண்ணை மணந்த இளம்பெண்..!நீதிமன்றத்தில் தஞ்சம்!

Published by
kavitha

ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆனது ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் ஆணாக மாறி சிவா என்ற பெயருடன் வாழ்ந்து வருகிறார்.கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்கிற இளம்பெண் ஆகிய இருவரும் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து 2019 வரை  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்து உள்ளனர்.

இருவரும் படிக்கும் போது நட்பு  ஏற்பட்டுள்ளது அதன்பின் நட்பு காதலாக மாறியது.தற்போது கல்லூரி படிப்பு முடிவிட்ட நிலையில் பிரிவை தாங்காமல் இருவரும் தங்கள் காதலை பெற்றோருக்கு தெரியப்படுத்தவே பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்  ஈரோடு  மாசாணி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தங்களது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் இருவரும் பாதுகாப்பு கருதி மதுரை உள்ள திருநங்கை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சம் அடைந்தனர். அந்த அறக்கட்டளையின் அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் தஞ்சமடைந்து உள்ளனர்.இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

2 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

9 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

10 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

10 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

10 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

10 hours ago