எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க!ஆணாக மாறிய பெண்ணை மணந்த இளம்பெண்..!நீதிமன்றத்தில் தஞ்சம்!

Default Image

ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆனது ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் ஆணாக மாறி சிவா என்ற பெயருடன் வாழ்ந்து வருகிறார்.கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா என்கிற இளம்பெண் ஆகிய இருவரும் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து 2019 வரை  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்து உள்ளனர்.

இருவரும் படிக்கும் போது நட்பு  ஏற்பட்டுள்ளது அதன்பின் நட்பு காதலாக மாறியது.தற்போது கல்லூரி படிப்பு முடிவிட்ட நிலையில் பிரிவை தாங்காமல் இருவரும் தங்கள் காதலை பெற்றோருக்கு தெரியப்படுத்தவே பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்  ஈரோடு  மாசாணி அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தங்களது பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் இருவரும் பாதுகாப்பு கருதி மதுரை உள்ள திருநங்கை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சம் அடைந்தனர். அந்த அறக்கட்டளையின் அறிவுறுத்தலின் பேரில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் தஞ்சமடைந்து உள்ளனர்.இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்