பப்ஜி விளையாட்டு உருவாக்கிய காதல் ஜோடிகளுக்கு திருமணம்!

Published by
Rebekal

ஊர் விட்டு ஊர் கடந்து பப்ஜி விளையாட்டு உருவாக்கிய காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பப்ஜி விளையாட்டின் மூலம் பலர் உயிர் இழப்பது போல, பலர் காதல் வலையில் மாட்டிக் கொள்கின்றனர். பேச்சுவார்தையுடன் கூடிய இந்த விளையாட்டால் தற்போது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் அருகே சிறுகோல் ஆசாரி பெற்ற பிள்ளை எனும் பகுதியை சேர்ந்த மரவியாபாரி சசிக்குமார் என்பவர் மகள் பபிஷா என்பவருக்கு 20 வயது ஆகிறது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பை நிறுத்திவிட்டு தற்போது மொபைல் போன் மூலம் பப்ஜி விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் திருவாரூரை சேர்ந்த அஜின் பிரின்ஸ் என்பவருடன் சேர்ந்து விளையாடும் போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. கடந்த 19ஆம் தேதி பாபிஷா வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இது குறித்து போலீசில் பாபிஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனை அடுத்து கடந்த 22ஆம் தேதி அஜின் மற்றும் பபிஷா திருவட்டார் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக உள்ளனர். எனவே போலீசார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்! 

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

9 minutes ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

1 hour ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

2 hours ago

“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!

இஸ்லாமாபாத் :  நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…

2 hours ago

“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

3 hours ago

ரெய்டை திசை திருப்ப இப்படி பண்றோமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…

3 hours ago