ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்-எஸ்.வி.சேகர்

Default Image

ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்று   எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைமை காலியாக உள்ள நிலையில் அந்த பதவியை நடிகர் ரஜினிகாந்த்  ஏற்பார் என்று தகவல் வெளியாகி வந்தது.அரசியலுக்கு வருவதாக ரஜினி பலமுறை கூறிவந்த நிலையில் தற்போது புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியாகியானது.விரைவில்  கட்சியை பதிவு செய்யும் பணிகளை துவங்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் ரஜினி குறித்து பல்வேறு அரசியல் கட்சினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில்.பாஜகவை சேர்ந்தவரும்,நடிகருமான  எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பாஜகவில் ரஜினி இணைவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு. ஆனால் பாஜக மற்றும் ரஜினியின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை . ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்பது உறுதி என்று  எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்