கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளையா.? பொன் ராதாகிருஷ்னன் உடன் விவாதிக்க தயார்.! தமிழக அமைச்சர் சவால்.!

Published by
மணிகண்டன்

கன்னியாகுமரியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயார் என தமிழக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பதில் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பெயர் சரித்திரத்தில் நிலைத்து இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தமிழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் மனோஜ் தங்கராஜ், ‘ கன்னியாகுமரியில் கடந்த அதிமுக – பாஜக ஆட்சியில் 39 குவாரிகள் இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை 6ஆக குறைந்துள்ளளது. சட்டவிரோதமாக யாருக்கும் குவாரி அனுமதி கொடுக்கவில்லை.

அண்மையில் குலசேகரம் அருகே, ஒரு கல் குவாரியில் கற்கள் உடைக்கப்பட்டு அவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாநிலம் விட்டு மாநிலம் இடையே கனிம வளங்களை கொண்டு செல்ல ஒப்பந்தத்தை மத்திய அரசு தான் போட்டுள்ளது. அதில் மாநில அரசு தலையிட முடியாது.

கனிம வளங்கள் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கள் பொய்யானவை. இந்த கனிம வளங்கள் பற்றி பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் போன் ராதாகிருஷ்ணன் அவர்களுடன் விவாதிக்க நான் தயார்.’ என சவால் விட்டுள்ளார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago