மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில், தமிழக அரசு வாதம்.
மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் வைத்து வருகிறது.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் போலி வீடியோ பரப்பிய புகாரில் பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் கைதானார். பீகார் மற்றும் தமிழகத்தில் அவர் மீது தனித்தனி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி வீடியோ பரப்பிய புகாரில் பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், கடந்த 6-ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, யூடியூபர் மணீஷ் காஷ்யப், தன் மீது பதியப்பட்ட பல்வேறு வழக்குப்பதிவுகளை இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…