ManishKashyap case. [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில், தமிழக அரசு வாதம்.
மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் வைத்து வருகிறது.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் போலி வீடியோ பரப்பிய புகாரில் பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் கைதானார். பீகார் மற்றும் தமிழகத்தில் அவர் மீது தனித்தனி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி வீடியோ பரப்பிய புகாரில் பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிலையில், கடந்த 6-ஆம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, யூடியூபர் மணீஷ் காஷ்யப், தன் மீது பதியப்பட்ட பல்வேறு வழக்குப்பதிவுகளை இணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…