இருசக்கர வாகனத்தில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்! மருத்துவமனையில் அனுமதி!

Published by
லீனா

இருசக்கர வாகனத்தில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில காலங்களாக மாஞ்சா நூலால் பல உயிர்கள் பறிபோன நிலையில், இந்த நூலை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பவர் அம்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அந்த வேளையில், தாம்பரம் – மதுரவாயல்  சாலையில் வந்து கொண்டிருந்தபோது அங்கு சிக்கிக் கொண்டிருந்த காத்தாடியின் மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்ததுள்ளது. அதில் நிலைகுலைந்து போன பரசுராமன் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து அந்த வழியே வந்த சிலர் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago