சென்னையில் தாம்பரம் அடுத்து பம்மல் நந்தனாா் தெருவைச் சோ்ந்த தாமோதரன் என்பவர் ஜவுளி கடை வியாபாரத்தில் நஷ்டப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதையடுத்து, தனது மனைவி தீபா, தாய் சரஸ்வதி மட்டுமின்றி ரோஷன், மீனாட்சி எனும் இரு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து விட்டு, பின்னர் மாமனாருக்கு தகவல் அளித்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
இதையடுத்து போலீஸாா் தாமோதரன் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதன்பேரில், குடும்பத்தினரைக் கொன்று விட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அரசு மருத்துவமனையில் உயிா் பிழைத்த அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையில் தாமோதரன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு மரண தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…