சாலையோரத்தில் மனிதக்கால் கண்டெடுப்பு! போலீசார் விசாரணை!

Default Image

கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுப்பு.

கடலூர் மாவட்டம், கெடிலம் ஆற்றங்கரை ஓரமாக மனிதக்கால் வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிற நிலையில், யாராவது கொலை செய்து, கால்பாகத்தை தூக்கி எறிந்துள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அந்த காலில், துணிகள் கட்டப்பட்டிருந்ததை கண்டு, போலீசார்அருகில் உள்ள தனியார் மருத்துவாமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு அண்மையில், கால் அகற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘மருத்துவ நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக, நோயாளியின் இடது கால் அகற்றப்பட்ட பாகத்தை, முறையாக அப்புறப்படுத்தாமல், வெளியே வீசியுள்ளனரா?’ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்