பெண் ஒருவரின் செல்போன் நம்பரை லோகோண்டா இணைய தளத்தில் பதிவிட்டவர் கைது!

Published by
Rebekal

லோகோண்டா எனும் இணையத்தளத்தில் பெண்ணின் செல்போன் நம்பரை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தரமணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை லோகோண்டா என்ற இணைய தளத்தில் பதிவிட்டு, அவரை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த புலன் விசாரணையில் லோகோண்டா இணையதள தொடர்பு கொண்டு பெண்ணை பற்றி ஆபாசமாக பதிவிடுவது குறித்த தகவல்களை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சென்னை தரமணியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் மகன் சூரிய நாராயணனை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இணையதளங்களில் ஆபாசமாக இதுபோன்று பதிவு போடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

LIVE : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்… டெல்லி – ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள்!

சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…

27 minutes ago

TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…

39 minutes ago

வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!

சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…

1 hour ago

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

13 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

14 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

14 hours ago