லோகோண்டா எனும் இணையத்தளத்தில் பெண்ணின் செல்போன் நம்பரை பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தரமணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை லோகோண்டா என்ற இணைய தளத்தில் பதிவிட்டு, அவரை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த புலன் விசாரணையில் லோகோண்டா இணையதள தொடர்பு கொண்டு பெண்ணை பற்றி ஆபாசமாக பதிவிடுவது குறித்த தகவல்களை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சென்னை தரமணியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் மகன் சூரிய நாராயணனை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இணையதளங்களில் ஆபாசமாக இதுபோன்று பதிவு போடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…