குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கட்சிகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களையும் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.அவ்வாறு இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை வடகிழக்கு மாநிலங்கள் காட்டி வந்த நிலையில் மேற்கு வங்கமும் இதற்கு விதி விலக்கல்ல அங்கும் போராட்டம் நடந்தது.ஒரு கட்டத்தில் கலவரமாக மாறி போராட்டக் காரர்கள் இரயில்கலுக்கு தீ வைத்து கொழுத்துவிட்டனர்.இதனால் இரயில் சேவை பாதிக்கப்பட்டது.மேலும் இணையசேவையும் முடக்கப்பட்டது.
சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் குரல் கொடுத்தும்,போராட்டம் மற்றும் பேரணிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டம் மூலம் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது இந்த கடுமையான ஆட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது இந்தியாவின் ஜனநாயக ஆன்மாவை காப்பாற்ற அமைதியான,ஆழமான போராட்டங்கள் அவசியம்.
நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்’ ஜனநாயகத்தை காக்க போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்க வர வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.இந்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பா.சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கு கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…