மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை..!

Default Image

நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் காலை 11 மணிக்கு காணொலி மூலம்  கமல் ஆலோசனையில் ஈடுபடுகிறார். 

சமீபத்தில் விரைவில் புதிய அறிவிப்புகளோடு சந்திப்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த நிலையில், நாளை நிர்வாகிகளுடன் காலை 11 மணிக்கு காணொலி மூலம் கமல் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

புதிய நிர்வாகிகள் நியமனம், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது, மக்கள் நீதி மய்யம் அடுத்தக்கட்ட பயணம், கட்சி வலுப்படுத்துதல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து திமுகவின் அனைத்து செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்