பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.! திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!

Published by
மணிகண்டன்

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ வீடானது சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ளது.  அவர் வீட்டில் பணிப்பெண்ணாக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமி வேலைபார்த்து வந்துள்ளதாக தெரிகிறது. அவர் நேற்று முன்தினம் உடலில் காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குஜராத்தில் துயரம்! படகு கவிழ்ந்து 16 பேர் பலி!

அந்த சிறுமி  தனது உடலில் ஏற்பட்ட காயங்கள் , ஆண்டோ வீட்டில் தனக்கு நேர்ந்த துன்புறுதல்கள் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மனைவி மெர்லினா ஆகியோர்  வீட்டில் தான் பணிப்பெண்ணாக 6 மாதங்களுக்கு முன்னர் சேர்ந்ததாகவும், ஆரம்பம் முதலே அவர்கள் தன்னை கொடுமை படுத்தியதாகவும், அதனால் தான் வேலைக்கு வரவில்லை என கூறியதாகவும், ஆனால் தான் எம்எல்ஏ மருமகள் என மெர்லினா மிரட்டி, மீண்டும் தன்னை வேலைக்கு அழைத்ததாகவும் கூறினார்.

அதிக நேரம் வேலை வாங்குவார்கள் என்றும்  தான் வேலை செய்யவில்லை என்பதற்காக தன் மீது சூடு வைத்து, கரண்டியால் அடித்து பல முறை துப்புறுதியதாகவும் அந்த வீடியோவில் சிறுமி கூறி இருந்தார். (சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு அந்த வீடியோ பதிவை நமது தளத்தில் பதிவிடவில்லை)

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, நீலாங்கரை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரடியாக சென்று வாக்குமூலம் பெற்றனர்.

சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தை அடுத்து பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் (பாதிக்கப்பட்ட சிறுமி  பட்டியலினத்தை சேர்ந்தவர்), குழந்தை துன்புறுத்தல் தடுப்பு சட்டம், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆண்டோ மற்றும் மெர்லினா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீலாங்கரை மகளிர் காவல் நிலையம் சார்பில் சம்மன் அனுப்பப்படும். சிறுமியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ அறிக்கைகள் கொண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago