சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் விவகாரம் வெளியே வந்தவுடன் சென்னையில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சமூக வலைதளங்களில் முன்னாள் மற்றும் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
அந்த புகார் அடிப்படையில் காவல்துறை, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடக்கிறது. அந்தவகையில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆனந்தன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஆனந்தன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஆனந்தன் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? இதுவரையும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என உரிய விசாரணை நடத்த மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை தொடர்ந்து, பள்ளி தாளாளர் பிரீத்தி, குழுமத்தின் தலைமை கல்வி அதிகாரி பிரேமலதா ஆகியோர் விசாரணைக்காக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…