சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் விவகாரம் வெளியே வந்தவுடன் சென்னையில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சமூக வலைதளங்களில் முன்னாள் மற்றும் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
அந்த புகார் அடிப்படையில் காவல்துறை, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடக்கிறது. அந்தவகையில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆனந்தன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஆனந்தன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஆனந்தன் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..? இதுவரையும் எந்த விதமான நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என உரிய விசாரணை நடத்த மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பினர்.
இந்த சம்மனை தொடர்ந்து, பள்ளி தாளாளர் பிரீத்தி, குழுமத்தின் தலைமை கல்வி அதிகாரி பிரேமலதா ஆகியோர் விசாரணைக்காக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர்.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…