மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் ! ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் உள்ளிட்டோர் ஆஜர்

Default Image

மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் தொடர்பாக  ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் உள்ளிட்டோர் ஆஜராகி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து  வருகின்றனர்.

நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார்.  நேற்று நடைபெற்ற  விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது.மேலும்  இன்று ஆஜராகவும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகியுள்ளனர்.இந்த நிலையில் வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்