Magalir Urimai Thogai : மகளிர் உரிமை திட்டம்.. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.!

திமுக கொடுத்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டமானது இன்று செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் துவங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், இன்று முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டபடி, இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் செல்ல உள்ளார். அங்கு நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பலருக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை துவங்கி வைக்கிறார்.
இந்திட்டத்தின் மூலம் குறுஞ்செய்தி வராத குடும்ப தலைவிகள், அடுத்த 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்த 30 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025