“மக்களே கவனமாய் இருங்கள்” – எம்பி சு.வெங்கடேசன் எச்சரிக்கை!

Published by
Edison

மதுரை:வைகை அணையிலிருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால் அதனை ஒட்டியுள்ள கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனால்,தமிழகத்தில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில்,வைகை அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.இதனால், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வைகை அணையை ஒட்டியுள்ள கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும் என்று மதுரை எம்பி.சு வெங்கடேசன் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“வைகை அணையின் நீர் திறப்பு 3000 கண அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக இன்று காலை உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 3569 கண அடியாக உள்ளதால் ஆற்றில் வெள்ளமாக 3000 கண அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்,கரையோர மக்கள் கவனமாய் இருக்கவும்”,என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

43 minutes ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

2 hours ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

3 hours ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

3 hours ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

3 hours ago