பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே.! சு.வெங்கடேசன் டிவிட்டரில் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

அண்மையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், திராவிட மாடல் காலாவதியான ஐடியா, சித்த மருத்துவ கல்லூரி பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைப்பு, சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். இந்த கருத்துக்கள் தமிழக  அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டு செய்து வருகின்றன.

சித்த மருத்துவகல்லூரி பற்றிய சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக பேசிய ஆளுநர், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரக மாநில முதல்வர்கள் இருக்கும்படி சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், கல்வித்துறையில் அரசியல் இருக்க கூடாது என்பதால் இது சரியாக இருக்காது என மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநர் ரவியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், தனது டிவிட்டர் பக்கத்தில், உத்திர பிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் துணைவேந்தராக உள்ளார். என குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது “விதிகளுக்கு முரணானது.” என் ஆளுநர் கூறுவதாக விமர்சனம் செய்து இருந்தார். மேலும், பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை பதிவிட்டு இருந்தார் எம்.பி சு.வெங்கடேசன்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

14 minutes ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

33 minutes ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

50 minutes ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

1 hour ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

1 hour ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago