மதுரை மெட்ரோ ரயில் சேவை தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
Rebekal

மதுரை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட  வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடந்து வரும் நிலையில், 20 லட்சம் மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு மட்டுமல்லாமல், கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவையும் தற்பொழுது வரையும் செயல்பட்டு வரும் நிலையில், மதுரை நகரை கடந்து திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் மதுரையை சார்ந்ததாகவே மாறிப் போயிருக்கும் நிலையில் மதுரையில் உள்ள மக்கள் தற்பொழுது பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் வாக்குறுதியாக அமைந்து தற்போது வரை இருப்பதாகவும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அது மட்டுமல்லாம், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கோரிக்கையை பலதரப்பு சார்பில் கொடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் செயல்முறை படுத்தப்படாததால் போக்குவரத்து நெருக்கடியில் சென்னைக்கு அடுத்து மதுரை இருப்பதாகவும் ரமேஷின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு மத்திய, மாநில அரசுகள் மதுரை மெட்ரோ ரயில் சேவை குறித்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

3 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

3 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…

5 hours ago

Live : தவெக பூத் கமிட்டி மாநாடு முதல்… இந்தியா – பாகிஸ்தான் எல்லை பதற்றம் வரை…

சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…

5 hours ago