மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர்.
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், மதுரையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டது.
அதன்படி, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அம்மன் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர். மேலும், பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணிக்கு முதல் 8 மணி வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…