மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
அதன்படி அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டு உள்ளது. கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி அபிசித்தர் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு `தார் SUV’ உடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. விளாங்குடியை சேர்ந்த பரத்குமார், சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 2-வது இடம் பெற்றனர், மணி என்பவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
கீழ்க்கரை ஜல்லிக்கட்டில் பல காளைகளை வீரர்கள் அடக்கினாலும், பலவற்றை அடக்க முடியவில்லை, அந்த அளவுக்கு பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் திமிறின. அதில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் காளையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…