நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தனி வார்டு அமைத்துள்ள மதுரை அரசு மருத்துவமனை.
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீபா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு வார்டு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மதுரையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனிமைப்படுத்தும் பகுதி சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை எச்ஓடி மருத்துவரான டாக்டர் நடராஜன் கூறுகையில் தற்போது எங்களிடம் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், வைரசால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த 20- படுக்கைகளை கொண்ட சிறப்பு வார்டை ஒதுக்கி உள்ளோம் என்றும், அனைத்து படுகைகளிலும் மானிட்டர், வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிப்பா வைரஸ் அறிகுறிகள் இதுகுறித்து கூறுகையில், இது வைரஸ் தொற்று என்று அழைக்கப்படுகிறது. எனவே இது காய்ச்சல், உடல் வலி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளாக வெளிப்படும். இந்த வைரஸ் மத்திய நரம்பு மண்டல அமைப்பு அதிகமாக பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பல மொட்டுகள், பூனைகள், நாய்கள் மற்றும் வீட்டு பன்றிகளிடம் இருந்து பரவுகிறது. மனிதனுக்கு மனிதன் பரவக்கூடிய சக்தி கொண்டது என்ற தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…