மதுரை பட்டாசு ஆலை வெடி விபத் தில், பட்டாசு ஆலை மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள செங்குளத்தை அடுத்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், காட்டுப்பகுதியில் பட்டாசு அலை இயங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வருகிற நிலையில், பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 40 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் பட்டாசு ஆலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மதுரை டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர், மேலாளர், போர்மேன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட போர்மேன் சுந்தரமூர்த்தி 80 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…