மதுரை மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பு!

Published by
லீனா

முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 1762 பேர் மூலம் 1,83,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது தேவைகளுக்காக வெளியே வரும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மதுரையில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம்  விதிக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக சாலையில் முக கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 1762 பேர் மூலம் 1,83,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து  பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Published by
லீனா

Recent Posts

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

கொல்கத்தா : 18 வது சீசனுக்கான  ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …

8 hours ago

பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் – இபிஎஸ் பேச்சு!

சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…

8 hours ago

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…

9 hours ago

ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்றாங்க! அமித் ஷா பேச்சு!

டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி  முதல் தொடங்கிய நிலையில், வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி…

9 hours ago

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…

10 hours ago

இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…

11 hours ago