மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து கூறிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் மதுரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தமிழகம் வந்திருந்தார். அப்போது மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், ‘ மதுரை எய்ம்ஸ் கட்டடத்தின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்தது.’ என கூறினார்.
பாஜக தலைவரின் இந்த கூற்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முதற்கட்ட 95 சதேவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அதனை தான் ஜே.பி.நட்டா கூறினார் என பாஜகவினர் அதற்கு விளக்கம் தெரிவித்தும் வந்தனர்.
இருந்தும் இந்த ’95 சதவீத எய்ம்ஸ்’ சர்ச்சை முடிந்தபாடில்லை. தற்போது மதுரை ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து கூறிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எய்ம்ஸ் பற்றி மத்திய சுகாதாரத்துறையோ அல்லது எய்ம்ஸ் நிர்வாகம் தான் கருத்து கூறவேண்டும். ஒரு கட்சி தலைவர் இதனை கூறுவது ஏற்புடையது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகாரை, மதுரை காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவினை சேர்ந்தவர்கள் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…