தலைமை காவலரின் உயிரை பறித்த கட்டடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை கீழவெளி பகுதியில் நடமாடும் தேநீர் கடையில் தேநீர் விற்பனை நடைபெற்று இருந்தது. இதனால், அந்த இடத்தில் அதிகமாக கூட்டம் இருந்த நிலையில் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு இரவு நேர ரோந்து பணியில் இருந்த சரவணன், கண்ணன் இருவரும் கூறி விட்டு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்து தலைமைக் காவலர் சரவணன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு தலைமைக் காவலர் கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து, உயிரிழந்த காவலர் சரவணன் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி, அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், பலத்த காயமடைந்த மற்றொரு தலைமைக் காவலரான கண்ணன் அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், தலைமை காவலரின் உயிரை பறித்த கட்டடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…