விராட் கோலி மற்றும் தமான்னாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை.
இன்றைய இளைஞர்கள் பலரும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடும், அதில் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், தங்களது உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர், தமிழகத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் சிலர், மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், தங்களது பாக்கெட்டுகளை நிரப்புவதில் தான் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும், இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரதீப் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா, ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நவ.19-ம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…