மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், மக்களை கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அழகர் திருவிழா நடத்தக்கோரிய அருண் போத்திராஜ் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா மிக தீவிரமாக பரவி வரும் சூழலில் இந்த நிகழ்வை நடத்துவது எவ்வாறு சத்தியம் சாத்தியம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…