விறுவிறுப்பாகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! காளைகள் முதல் டாஸ்மாக் வரை கட்டுப்பாடுகள் தீவிரம்.!

Published by
மணிகண்டன்

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை (ஜனவரி 15 பொங்கல் தினத்தில்) அவனியாபுரத்திலும் அடுத்து (ஜனவரி 16 மாட்டு பொங்கல் அன்று) பாலமேட்டிலும் அதற்கு அடுத்ததாக ஜனவரி 17 காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

நாளை அவவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் , துணை ஆணையர்கள் மங்ளேசுவரன், பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்புப் பணியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அம்மாவட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

திருச்சியில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.! 14 இடங்களில் அனுமதியில்லை

  • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்படும். அந்த அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே நாளை அவனியாபுர ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படுவர்.
  • காளைகளுடன் வரும் உரிமையாளர், உதவியாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் யாரும் மது போதையில் இருக்கக் கூடாது.
  • காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்கு கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது .
  • ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் , தங்கள் புகைப்படம் அடங்கிய அனுமதி சீட்டு, மருத்துவ தகுதி சீட்டு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
  • வாடிவாசல் அருகே உள்ள வீட்டின் உரிமையாளர்கள், தங்கள் குடும்பத்தினரை தவிர வேறு நபர்களை ஜல்லிக்கட்டு தங்கள் வீடுகளில் அனுமதிக்க கூடாது. ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

என பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. முன்னதாக, மதுரை மாநகராட்சி நிர்வாகம், அவனியாபுரம் பகுதியில் உள்ள 10 டாஸ்மார்க் கடைகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago