மதுரை மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்கி 2026 ஆம் ஆண்டு முடிவடையும் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கட்டோச்சி தலைமையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நியமிக்கப்பட்டுள்ள 17 பேர் உடைய நிர்வாக குழுவினரின் முதல் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் எம்.பி.மாணிக்கம் தாகூர் 2026 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் அமையவுள்ள 16 ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவது உறுதியாகியுள்ளது. மேலும், இதற்காக ரூ.1,678 கோடி கட்டிட பணிகளுக்காக ஜப்பான் நிறுவனத்திடம் கடன் வாங்கவுள்ளதாகவும், மீதம் 300 கோடியை மத்திய அரசு தர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு 2023 இல் கட்டிட பணிகள் துவங்கப்பட்டு 2026 இல் முடிவடையவுள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு 50 மாணவர்கள் சேர்க்கை தொடங்க அனுமதியளித்துள்ளது.
இவர்களுக்கான வகுப்பறை, தங்குமிடம் போன்றவை குறித்து சிவகங்கை, தேனி மருத்துவக்கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்வது குறித்து தமிழக அரசு ஒரு மாதத்தில் முடிவெடுக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…