எம்ஜிஆர் கூற்றை தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர்.! – வியாபாரிகள் கூட்டமைப்பினர் வருத்தம்.!

Published by
மணிகண்டன்

திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். – வியாபாரிகள் கூட்டமைப்பினர்.

அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மதுரை இரண்டாவது தலைநகராக அறிவிக்கும் அதிமுகவின் இந்த முடிவிற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக திருச்சியில் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்காவிட்டால் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கையில், ‘திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் கனவு. ஆனால், அதனை மறந்து தற்போது மதுரையை இரண்டாவது தலைநகரம் மாற்றுவோம் என கூறி வருவது எம்ஜிஆரின் கொள்கையை தற்போது உள்ளவர்கள் மறந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம்.

ஜாதி மதம் என கலவரம் இல்லாத பூமி திருச்சி. தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் இரண்டாவது தலைநகரம் பற்றிய பேச்சை அமைச்சர்கள் எதற்காக எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விளக்கம் தரவேண்டும். அடுத்த சில வாரங்களில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழு அமைக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவும், திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது. இந்த பிரச்சினை குறித்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்கள் பேசாதது மன வருத்தம் அளிக்கிறது.’ எனவும் வியாபாரிகள் கூட்டமைப்பினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?

வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?

சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…

11 minutes ago

சுனிதாவை அழைத்துவரும் திட்டம் ஒத்திவைப்பு! கடைசி நேரத்தில் வந்த திடீர் சிக்கல்?

வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…

19 minutes ago

பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…

52 minutes ago

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

10 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

12 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

12 hours ago