மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம்.. மனுவை தள்ளுபடி செய்த சென்னைக்கு உயர்நீதிமன்றம்!

Default Image

மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க கோரி வழக்கறிஞர் ராஜசேகர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, அனைத்து விதமான மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க கோரி, வழக்கறிஞர் ராஜசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 90 சதவீதத்திற்கும் மேலான மக்கள் மின் கட்டணத்தை செலுத்திவிட்ட காரணத்தினால், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்