அமமுகவை தடை செய்யகோரிய வழக்கு – விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Default Image
  • தினகரன் கட்சியை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
  • அமமுகவை பதிவு செய்ய தடை கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே  நடைபெற்றபோது, கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் அமமுக-வை பதிவு செய்ய தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், தினகரன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னர் இதன் வழக்கு விசாரணை நடைபெற்றது.இதில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த நவம்பர் 25ம் தேதி அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது என்று கூறினார்.பின்னர்   ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய, அக்கட்சியின் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள், கட்சியில் இருந்து விலகிவிட்டால், மாற்று நபர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாமா?   என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.மேலும் இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்