ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published by
கெளதம்

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைந்த பிறகு, நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளினால் (சூதாட்டம்) பணத்தை இழந்து அதிக கடன்களை வாங்கி பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தின் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது.

கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநில அரசுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிமை இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

முன்னதாக, தமிழக அரசு மற்றும் ஆன்லைன் நிறுவனங்கன் என இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பதிவு செய்த நிலையில், தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருந்தது. அதன்படி தமிழக அரசுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இது குறித்து தமிழக அரசு குறிப்பிடுகையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து இதுவரை 32 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் படித்த இளைஞர்கள், தினக்கூலி வேலையாட்கள் என பலர் பணத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் விளக்கம் அளித்து இருந்தது.

இருதரப்பு வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தீர்ப்பு தேதியானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதியப்பட்ட வழக்கில் நீதிபதி கங்காபூர்வாலா, ஆதிகேசவலு அடங்கிய நீதிபதி அமர்வுக்கு முன்பு, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு – வைத்திலிங்கம்

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழகத்தில் அதிர்ஷ்ட ஆன்லை விளையாட்டுகளை தமிழ்நாடு அரசு தடை விதித்தது செல்லும் என அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம், திறமைக்கான விளையாட்டுக்களான ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திமுக அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் ரவி பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்தார். தமிழ்நாடு அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

1 hour ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

3 hours ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

4 hours ago

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

5 hours ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

6 hours ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

7 hours ago