தூத்துக்குடி துப்பாக்கி சூடு : 2 வாரம் அவகாசம்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

தூத்துக்குடி: கடந்த 2018 மே 22ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தபட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்கை மனித உரிமை ஆர்வலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளையும், சம்பவம் தொடர்பான விசாரணையில் தங்கள் அதிருப்தியையும் நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை முறையாக நடைபெறவில்லை. விசாரணை ஒருதலை பட்சமாக நடைபெற்றுள்ளது. போராட்டம் நடந்த இடத்தை தாண்டி குடியிருப்பு பகுதிகளிலும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அப்படி இருக்கையில், இந்த வழக்கில் எந்த அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

100 நாள் போராட்டத்தில் எத்தனை நாட்கள் வன்முறை நடைபெற்றது.? அதுபற்றிய தரவுகள் வேண்டும். துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில் அந்த 1 மாத காலம் வரையில் பொறுப்பில் இருந்த அனைத்து காவல்த்துறை அதிகாரிகளின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை சேகரிக்க வேண்டும். அதற்கு 2 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது என கூறி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் – சீமான்!

சென்னை :   தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…

23 minutes ago

உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!

சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…

49 minutes ago

இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல! ATM சேவைக்கான கட்டண உயர்வு…கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…

2 hours ago

RRvsCSK : சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சென்னை… தோல்வியில் இருந்து மீளுமா?

குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…

2 hours ago

ரம்ஜான் பண்டிகை 2025 : களைகட்டிய ஆடுகள் விற்பனை…எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : ரம்ஜான் பண்டிகை வந்துவிட்டிட்டது என்றாலே ஆடுகள் விற்பனை என்பது அமோகமாக நடைபெறும். அதன்படியே இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு…

2 hours ago

SRHvDC : 300 அடிக்குமா ஹைதராபாத்? கடப்பாரை பேட்டிங்கின் அதிரடியை சமாளிக்குமா டெல்லி?

விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக…

3 hours ago