சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எப்போது குறித்த தகவல் இதுவரை தமிழக அரசு அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று முதல் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது . மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் புத்தகங்கள் கொடுப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார்.
தற்போது தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் “டிவி” சேனல்கள் வழியே பாடங்களை நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தொலைகாட்சியில் பாடங்கள் நடத்தப்படுவதால் பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என புத்தகங்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…