மதுசூதனன் விரைவில் குணமடைய வேண்டும் – சசிகலா

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெறவேண்டும் என்று நலம் விசாரித்த பின் சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கிள் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மருத்துவமனைக்கு சென்று மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது, அதிமுக கொடி பொருத்திய காரில் மருத்துவமனை சென்று மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மதுசூதனனின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடமும் சசிகலா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுக மீது பற்றுக்கொண்ட மதுசூதனன் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் வந்து அவரை பார்த்தேன் என்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமு எனும் எங்கள் குடும்பத்தில் மதுசூதனன் மூத்த சகோதரர் என்று கூறியுள்ளார்.