சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டிலிருந்து எம்.பில் படிப்பு நிறுத்தம்..!

Published by
Sharmi

சென்னை பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வி ஆண்டிலிருந்து எம்.பில் பட்ட படிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் இதன் இணைப்பு கல்லூரிகளில் எம்.பில்., பட்டப்படிப்பு 2021-2022 கல்வியாண்டிலிருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைப்படி,  எம்.பில்., பட்டப்படிப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தனர். இதனையடுத்து 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு(எம்.பில்.,) முடித்தவர்கள் கல்லூரிகளில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்தனர். மேலும், இந்த பட்டப்படிப்பை இனி பயிற்றுவிக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.

தற்போது சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 18 ஆம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு 2021-2022 லிருந்து பல்கலைக்கழக துறைகள், இணைப்பு கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் எம்.பில்., பட்டப்படிப்பு நிறுத்தப்படுகிறது.

அதனால் இந்த கல்வியாண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டபடிப்பிற்கான சேர்க்கை நடைபெறாது. மேலும், இதற்கு முன்னர் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் படிப்பை முடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago