தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது – ஸ்டாலின்!

mk stalin

தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி,  திருச்செந்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்  உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அவதி அடைத்தனர். இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி,  திருச்செந்தூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மழை நின்றபிறகு இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாத காரணத்தால் மக்கள் அவதியில் இருக்கிறார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணத்தொகையாக ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அதில் கூறியதாவது ” பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.

தலைமைச் செயலாளர் அவர்களும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது” என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்