நல்ல வேலை வேண்டுமா.? தனித்திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில், மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான ‘மாபெரும் தமிழ்க் கனவு’ 100-வது நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நேற்று நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், மாணவர்கள் வரலாற்றை படிக்கச் வேண்டும். நான் முதல்வன் திட்டமானது எனது கனவு திட்டம் ஆகும். அதனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி எனது பிறந்தநாளில் அதனை துவங்கி வைத்தேன் என குறிப்பிட்டார். அனைத்து மாணவர்களுக்கும் அனைத்தும் தெரிய வேண்டும் என இந்த நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
மாணவர்கள் இபபோது அனைவரும் நன்றாக படிக்கிறார்கள். படிப்ப்பை விட தனித்திறமைகள் என்பது மிக அவசியம். தனித்திறமைகளை கொண்டவர்களுக்கு தான் நல்ல வேலை கிடைக்கிறது. அதனால் அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.