அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் – எடப்பாடி பழனிசாமி

Published by
லீனா

அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருவது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதற்கு சமம் என எடப்பாடி பழனிசாமி பேட்டி. 

சேலம் மாவட்டம் அட்டையாம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கினார்கள். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினார்கள். அனைத்து போராட்டத்திற்கும் அனுமதி கொடுத்து அதனை சமாளித்தோம். ஆனால் இன்றைய முதல்வரால் எதையும் சமாளிக்க இயலவில்லை என குற்றம் சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருவது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதற்கு சமம். மேலும் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் தற்போது வழங்கப்படவில்லை.

மடிக்கணினி திட்டத்தை ரத்து செய் செய்தவர்களை இளைஞர் சமூகமும் காலமும் மன்னிக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார். அவருக்கு சிலர் துணை போகின்றனர். அந்த கருப்பு ஆடு யார் என்பது உங்களுக்கே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும். திமுகவின் பகல் கனவு இனியும் பலிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago