அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் – எடப்பாடி பழனிசாமி

Default Image

அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருவது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதற்கு சமம் என எடப்பாடி பழனிசாமி பேட்டி. 

சேலம் மாவட்டம் அட்டையாம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கினார்கள். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினார்கள். அனைத்து போராட்டத்திற்கும் அனுமதி கொடுத்து அதனை சமாளித்தோம். ஆனால் இன்றைய முதல்வரால் எதையும் சமாளிக்க இயலவில்லை என குற்றம் சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருவது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதற்கு சமம். மேலும் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினிகள் தற்போது வழங்கப்படவில்லை.

மடிக்கணினி திட்டத்தை ரத்து செய் செய்தவர்களை இளைஞர் சமூகமும் காலமும் மன்னிக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார். அவருக்கு சிலர் துணை போகின்றனர். அந்த கருப்பு ஆடு யார் என்பது உங்களுக்கே தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும். திமுகவின் பகல் கனவு இனியும் பலிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்