தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு... ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

மு.க.ஸ்டாலின்: சீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக முதல்வர்

Mariyappan Thangavelu

மு.க.ஸ்டாலின்:சீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்க தொகை வழங்கியுள்ளார்.

மாற்று திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஜப்பானில் உள்ள கோபே நகரத்தில் நடைபெற்றது. இதில்100 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

இந்த தொடரில் தடகள வீரரான தமிழகத்தை சேர்ந்த ‘பாரா’ தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்துகொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர் தனது 5 வயதில் பஸ் விபத்தில் சிக்கினார். இதனால், அவரது வலது முழுங்கால் பாதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து துனிசியாவில் நடந்த பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் சிறப்பாக செயல்பட்ட மாரியப்பன், ரியோ பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தங்கம் வென்று சாதித்தார்.

அதன்பின் இந்த ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தொடரில் மேலும் சிறப்பாக விளையாடிய இவர் தங்கம் வென்று தமிழகத்தை தலை நிமிர செய்தார். தற்போது, தங்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக முதலவரான மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலை வழங்கி வாழ்த்தி இருக்கிறார்.

unknown node