நீட் விலக்கு மசோதா தொடர்பாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசிடம் இருந்து தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீட் விலக்கு மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இப்படி தவறான தகவலை கூறியதால் அவர் பதவி விலக வேண்டும் என கூறினார்.
இது குறித்து பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படவில்லை. அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. என கூறி, நான் தவறாக பதிவிட்டுருந்தால் நான் ராஜினாமா செய்ய தயார். நீங்கள் தவறாக குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் பதவி விலக தயாரா என பதிலடி கொடுத்துள்ளார்.
பிறகு திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், ‘ இம்மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிவில்நீட் விலக்கு மசோதா நிராகரிக்க பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அனால் நேற்று சி.வி.சண்முகம், நிராகரித்ததை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதிமுகவின் இந்த செயல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது’ என கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…