பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவு.
யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவிடம் லஞ்சம் கேட்ட சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சகல வசதிகளை வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ வெளியான நிலையில், சிறை அதிகாரி செல்வதை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…