புதிதாக கட்சி தொடங்கி விட்டு சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக கமலஹாசனை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் சாடியுள்ளார்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, புதிதாக துவங்கியுள்ள கட்சிகளும் தங்களது வாக்குகளை சேகரிப்பதற்காக தற்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி விட்டனர். ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை சாடி தங்களது கட்சிகளை பெருமைப்படுத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் ஒருவர் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக கமலஹாசன் அவர்களை மறைமுகமாக சாடியுள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கொண்டு வரக்கூடிய பொய் பிரச்சாரங்களை அதிமுக முறியடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…