நாட்டிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளதாகவும், பரிசோதனைகளும் இங்குதான் அதிகமாக செய்யப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டது. அங்கு தினந்தோறும் ஒரு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது 36 அரசு, 16 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரைக்கும் 2,16,416 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் மொத்தம் 52 ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரித்ததால் பாதிப்பும் அதிகமாக உயர்ந்து வருகிறது மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும் 2-வது இடத்தில் குஜராத்தும் மற்றும் 3 வது இடத்தில் டெல்லியும் உள்ளன. ஆனால் இறப்பு எண்ணிக்கையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…