பாதி விலைக்கு மொபைல் தருவதாக மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காதலர்கள் கைது!

Published by
Rebekal

விலை உயர்ந்த மொபைல்களை தாங்கள் பாதி விலைக்கு தருவதாகக் கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்து மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்பவர் முகநூலில் தனக்கு விலை உயர்ந்த ஒன் பிளஸ் போன் பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதேபோல புதிய மாடல் விலை உயர்ந்த போன் பாதி விலைக்கு வாங்கி தருகிறோம் என கூறி தன் 2,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கிண்டி லேபர் காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பாக அடையாறு சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். தொடர்ச்சியாக அடையாறு சைபர் கிரைமில் இதுபோன்ற புகார்கள் வந்து கொண்டிருப்பதால் இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் முகநூல் மூலமாக மோசடி செய்த குற்றவாளிகள் யார் என்பதை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

தற்போது முகநூல் கணக்குகள், பேன் நம்பர் மற்றும் போன் நம்பர்களை வைத்து சோதனை செய்ததில் அப்பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நளினி என்னும் பெண்ணுடையது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததில் அவரது காதலன் அரவிந்த் என்பவர் முகநூல் மூலமாக பாதி விலைக்கு மொபைல் வாங்கி தருவதாகவும் தனக்கு கஸ்டம்சில் உள்ள நபர்களை தெரியும் எனவும் கூறி மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது. அரவிந்த் டிப்ளமோ கேட்டரிங் படித்து முடித்துவிட்டு பணம் சம்பாதிப்பதற்கு முகநூலை மோசடி தளமாக பயன்படுத்தியதும், இதற்கு கூட்டாக தனது 12ஆம் வகுப்பு வரை படித்த காதலியையும் உபயோகித்துக் கொண்டு உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு பிறரிடம் தாங்கள் பாதி விலைக்கு மொபைல் வாங்கி தருவதாக முகநூலில் வருகிற விளம்பரங்களை வைத்து தங்களிடம் சிக்குபவர்களிடம் பணத்தை வசூல் செய்து விட்டு அதன் பின் நம்பர்களை மாற்றி  வந்துள்ளனர். இதுபோல தொடர்ச்சியாக செய்து தாங்கள் விரும்பிய இடத்திற்கு எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலன் மற்றும் காதலி தற்பொழுது அடையாறு சைபர் கிரைமில் பிடிபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில் ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முகநூல் மோசடியில் ஈடுபட்டு கொடுங்கையூர் காவல் துறையினரால் அரவிந்த் கைது செய்யப்பட்டதும், அவரை அவரது காதலி நளினி ஜாமினில் எடுத்ததும் தெரியவந்துள்ளது. கடந்த மூன்று வருட காலமாக இருவரும் இணைந்து மோசடி செய்து வந்ததும், 50க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டு உள்ளதும், 10 லட்சத்துக்கும் அதிகமாக இவர்கள் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள், மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், மொபைல் போன்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளதுடன் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

4 hours ago
GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

5 hours ago
RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

6 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

7 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

10 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

10 hours ago