கடல் கடந்த காதல்.! இந்து, கிறிஸ்துவ மற்றும் சுயமரியாதை முறைப்படி திருமணம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞருக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்து, கிறிஸ்துவம் மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது.
  • இந்நிலையில், படிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது என குறிப்பிடப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகவேல் மற்றும் தமிழரசி தம்பதியரின் மகன் தரணி எம்டெக் படித்துள்ள இவர் ஸ்வீடன் நாட்டில் டெஸ்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் அங்கு எம்எஸ் படிக்க சென்றபோது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மரினா சூசேன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. பின்னர் நண்பர்களாக பழகி வந்த இவர்கள் இடையே காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். எனவே திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதலில் மணமகள் வீட்டார் விருப்பப்படி கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் மணமகன் வீட்டார் விருப்பப்படி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன்பின் மணமகனின் விருப்பப்படி சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நம் கலாச்சாரப்படி மணமகன் பட்டு வேட்டி சட்டை அணிந்தும், மணமகள் நீல நிற பட்டுப்புடவை அணிந்தும், திருமணத்தில் காட்சி அளித்தனர். பின்னமணமக்களை உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்தினர். குறிப்பாக திருமணத்தில் மணமகள் வீட்டார்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

4 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

5 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

5 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

5 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago