தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக அறிவித்தது.
இந்நிலையில் பெரம்பலுர் -அரியலூர் சாலையில் உள்ள சித்தளி அருகே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுகள் கொட்டப்பட்டு இருந்தன. அந்த இளஞ்சிவப்பு சீட்டுகள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய பயன்படுத்தப்படும் வாக்கு சீட்டு .
இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த வாக்குச்சீட்டுகளை சேகரித்தனர்.பொதுவாக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகளை ஆறு மாதம் வரை பாதுகாக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
அப்படியிருக்கையில் தேர்தல் முடிந்த அடுத்த மறுநாளே வாக்குச்சீட்டுகள் ரோட்டோரத்தில் சிதறி கிடப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் சிதறிக்கிடந்த வாக்கு சீட்டுகள் வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணப்பட்டதா..? அல்லது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திருடப்பட்டு ரோட்டோரத்தில் வீசப்பட்டதா..? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …